வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

அழைப்பிதழ்

தோழர் அதியனின் கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.







பீ வாசம்

by Thiru Priyadhasi on Monday, 13 February 2012 at 08:43 ·
பீ வாசம் உலகின் வேறெந்த நாடுகளிலும் இந்த 'கண்டுபிடிப்பு' இருக்குமாவென்று தெரியவில்லை. பொது இடங்களை 'ஆய்' போகும் இடங்களாக மாற்றிவிடும் திறன்  இந்தியர்களால்தான் சாத்தியப்படுத்த முடியுமென்று நினைக்கிறேன். குறிப்பாக வழிப்பாதைகள். சென்னை மக்கள் கழிவுக்கு பயன்படுத்தாத  சாலையோரங்கள், பிளாட்பாரங்கள் மிகக் குறைவு. விடியற்காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள் மெரீனா கடற்கரைக்குச் சென்றால் உலகின் மிக நீண்ட 'ஆய்' வரிசையைக் காணலாம்.
சென்னைதான் என்றில்லை. ஊர்ப்பகுதிகள் கூட இதற்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை. மழைக்காலங்களில் ஊர் மக்கள் ஆய் போக படுகின்ற பாடுகள் அலாதியானவை.
இதைப்பற்றி அழகிய பெரியவன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். தலித் முரசில் வெளியானதாக நியாபகம்.
 நேற்று  ஊருக்குப்போய்விட்டு திரும்பி வரும்போது.(ரயில்)அதிகமான ஆண்,பெண் புட்டங்களைப் பார்க்க நேர்ந்தது. ரயில் தண்டவாளங்கள் கழிப்பிடங்களாக மாற்றப்பட்டு,வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்ற அழகிய காட்சிகளைக் கண்டேன். காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு மரபை புதிதாகச் சொல்கிறானே, இவன்  என்ன  ஃபாரின் ரிட்டர்னோ  என்றெல்லாம் நினைத்துக் கொள்ளவேண்டாம்.
இந்தியன் ஒருவனின் ஜெனரல் கம்பார்ட்மென்ட் பயண அநுபவம் எவ்வளவு ரஸமானவை என்பதைப் பல ஆண்டுகளாக உணர்ந்து வருகிறேன். ரயிலில் ஏறிய ஒன்னரை மணி நேரம் கழித்து எப்படியும் இடம் கிடைத்துவிடும். அப்பர் பெர்த். அதாவது, லக்கேஜ் வைக்கும் இடம். தலை மின்விசிறியில் முட்டும்.கால்களைச் சுருட்டி பேன்ட் பாக்கெட்டுக்குள் தான் வைத்துக் கொள்ளவேண்டும். இப்படி இன்னும் நிறைய விசேஷங்கள் கொண்ட அப்பர் பெர்த் பயணங்களே அதிகம் வைத்திருந்ததால் இவ்வளவு நெருக்கத்தில் புட்டக்காட்சிகள் கண்டதில்லை.  நேற்று அதிசயமாய் கீழே உட்கார (சீட்டில்தான்) இடம்கிடைத்தது.(அந்த ஜோலார்பேட்டை இஸ்லாம் இணையர்களுக்கு அல்லாஹ் அருள் கிட்டுக!).
நீ....ண்ட நாட்கள் கழித்து ரயிலில் ஜன்னலோரப் பயணம். வறண்ட மலைகள், வயல்களோடு  நிறைய புட்டங்கள். கையில் ஒரு புத்தகம் இருந்தது. அதில் ஒரு கவிதை இப்படி இருக்கிறது.

                                                 " இரயில் பயணம்
                                                   சிறு தூறல்கள்
                                                   மண் மணத்தை மீறி எழும் 
                                                    பீ வாசம்...."

தண்டவாளங்களை மிக நீண்ட கக்கூஸ்களாய் உருமாற்றம் செய்யும் இந்தியர்களின் வினோத மனநிலையையும் காலம் காலமாக இதை செய்ய வைக்கும் ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனமும் குறித்த கேள்விகள் எழுந்தன இவ்வரிகளைப் படித்ததும்.
இதனை எழுதியவர் அதியன். இக்கவிதை " அப்பனின் கைகளால் அடிப்பவன் "என்கின்ற தொகுப்பில் உள்ளது. இன்னும் வெளியிடப்படாத இந்நூல் வரும் 19 ம் தேதி எழும்பூர் இக்சா மையத்தில்(கன்னிமரா நூலகம் எதிரில்) வெளியிடப்பட உள்ளது.அனைவரும் வருக.   

- முனைவர் சா.திருவாசகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக